Thursday, August 9, 2007

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி
காராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.

No comments: